Saturday, April 01, 2006

nivetha comment

பதிவுக்கு நன்றி நிவேதா...

//சத்யஜித்ரேயும், அகிரா குரோசோவாவும் இயக்கினால் மட்டும்தான் இவர்கள் பார்க்க வருவார்களாயிருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.//

;-)படத்தில கொங்கனா சென்னின் நடிப்புப் பிடித்திருந்தது. மன நோயானவர்கள் தமதான உலகத்தில் தமதான எதிர்பார்ப்புகளுடன் (கோபப்பட்டும், அதை மறந்தும், வன்முறைக்குட்படுத்தும் அதை மறந்து,) இயல்பாய் இருக்கிறார்கள் - அவர்களுக்கு நடந்த 'கெட்ட'வைக்கு நீண்ட ஆயுள் இல்லை. ஆனால் அவங்களச் சூழ்ந்தவர்கள் ("நோயற்றவர்கள்!") தமது குற்ற உணர்ச்சிகளாலும் நேசத்தாலும் குழப்பத்துக்குள்ளாகிறார்கள்... அந்த வகையில ஜோஜோவவிட அக்கா தனது உறவுகளிடமிருந்து பிரிய தங்கை ஒரு காரணமாக இருந்துகொண்டே இருப்பது அவருக்கான நிரந்தரத் தனிமையாக வாழ்க்கைக்கு (தங்கைக்குப் போலவே) நியாயமற்றதாக இருக்கிறது..(இயக்குநர் என்ற வகையில் அபர்ணா சென்னின் இந்தப் படம் கொங்கொனா-காக எடுக்கப்பட்டது என்றே நினைக்கிறேன்)

---//அநேகமான - சோகரசம் ததும்பும் - திரையிசைப்பாடல்கள் பெண்களின் துரோகங்களையும் கைவிடுதல்களையும், ஆண்களின் அவலங்களையும் வேதனைகளையும் பற்றி மட்டுமே பேசுகின்றனவே.. //

பொதுவாய் இந்த மாதிரி வெளிப்படையாய் நம்மள வையிற(!) பாடல்கள இலகுவா தாண்டிச் சென்றிரலாம்; உதாரணமா, -எமக்கு எங்களச் சார்ந்தவர்களிடமிருந்தே பாடலின் வரிகளை கேலியாய் கேட்க நேர்கிறபோது (எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?'' போன்ற அருமையான வரிகளை!!) -அதிர்ஷ்டம் இருந்தா எமக்கு அருகிலேயே- ஒரு செங்கல் கிடக்குமானால், அதை எடுத்துக் கொடுத்து 'இந்தா கொண்டே நட்டு வை' எண்டு விடலாம்!! அவ்வளவுதான் - அங்கால ஒண்டுமில்ல.
ஆனா தொ.நாடகங்கள் இந்துத்துவத்தோட/ மதத்தோட பெண்ணை பூஜிக்கிறதா சொல்லிக்கொண்டே அடக்குறது போல- அக்கா, அண்ணி என ஒவ்வொரு 'புனிதமான' உறவுகளதும் -இயக்குநர்களாய் இருக்கிற ஆண்களது உளவியல் விருப்புக்கேற்பவே-('நல்ல' 'பொறுப்பான' 'குடும்பத்தைப் பாக்கிற') இயங்குகிறார்கள். இது குறிப்பிட்ட பாடல் போல இல்லாமல் இடியப்ப சிக்கலாயிருது...குறைந்த பட்சம் இவன் புகழுறானா, இகழுறானா என்பதாவது நம்மளுக்கு புரியோணும் அல்ல?அது தொ.நாடகளங்களில இல்ல; எங்களப் புகழுறதுபோலவே இருக்கு.

இதே தான் இங்க soap operas என்கிற பெயரில் - கிறிஸ்தவ மதப் பின்னணியில - கரு அழிப்பு என்பனவிற்கு எதிராய் கருத்துக்களுடன் போய்க் கொண்டிருக்கு. same concept & same purpose.

80களில கூட சாத்தியமான குறைந்தபட்ச புரட்சிகரமான படங்கள்; (தமிழநாட்டில) பெரியார் போன்றவர்களது கருத்துக்களது தாக்கங்கள் எல்லாத்தையும்; ஒரேயடியாய் அள்ளிக்கொட்டி குப்பையில போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.. 'வயித்தில உள்ளதும் ஒரு உயிர்' எண்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண் சொல்லுவதாய் எடுக்கிற -இண்டைக்கு இப்படி வளர்ந்து போய் இருக்கிற- இந்த தொ-நாடகங்களை என்னதான் செய்ய இயலும்?
ஒரு பெண் பாலியல் வன்முறை என்கிற ஒன்றை தன்மேல் நிகழ்த்தப்பட்ட கோபமும், வன்மும் இருக்கக் கூட அனுமதி யற்று, அப்போதும் வயிற்றில் வளர்கிற ஒரு உயிர் குறித்த 'கருணை' கொண்டடிருக்க வேண்டுமென்பது ஆண் வேண்டும் மனம் அன்றி வேறென்ன?அதிலும் பெண்களது நலத்தை விரும்புகிற உளவியலை மதிக்கிற ஒருவனால் இப்படிச் "சுயநலமற்று" யோசிக்க முடியுமா?
Free Web Page Hit Counters
lasik uk